உடல் பருமனை கிண்டல் செய்த கணவன்… உணவு வழங்கவும் மறுப்பு!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உடல் பருமனை சுட்டிக்காட்டி மனைவியை தொடர்ந்து கிண்டல் செய்யவும் உணவு வழங்கவும் மறுத்த கணவனுக்கு எதிராக பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் குர்லா பகுதியில் குடியிருக்கும் 26 வயதான பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

திருமண நாள் முதல் தனது உடல் அமைப்பை சுட்டிக்காட்டி கணவர் தொடர்ந்து கிண்டல் செய்து வருவதாகவும், வரதட்சிணை மேலும் தர வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

கிண்டலுக்கு புறமே கடுமையாக தாக்குதலிலும் கணவர் ஈடுபட்டதை அடுத்து அவர் தமது தாயாரிடம் தகவல் தெரிவிக்கவும், இருவரும் இணைந்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

திருமணத்தை முன்னிட்டு 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் அளித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

கணவனின் பெற்றோரையும் இந்த வழக்கில் உட்படுத்தியுள்ளனர்.