சளி, இருமல் குணமாக மிளகு சப்பாத்தி!!

இனி வரும் பனிக்காலங்களில் அதிகப்படியான மக்கள் சளி, இருமல், நெஞ்சு சளி மற்றும் தீராத தலைவலிக்கு ஆளாகின்றனர். இதனை, விரைவில் குணப்படுத்தும் விதமாக, மிளகை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மிளகை சப்பாத்தியில் உபயோகிப்பது எப்படி? என காணலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

சூடான தோசைக்கல்லில் சப்பாத்திளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூப்பரான மிளகு சப்பாத்தி ரெடி.