தள்ளாத வயதிலும் எவரது உதவியுமின்றி தன்னந் தனியாக நின்று தோட்டம் செய்யும் யாழ்ப்பாண மூதாட்டி….!!

காரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77 வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார்.

தனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து வீட்டுத்தோட்டம் செய்கின்றார்.இவரது தோட்டத்தில் அதிகளவில் கௌபி பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய மரக்கறிப் பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்றன.

77 வயதில் தனி ஒருவராக இவரின் அயராத உளைப்பும் அசத்தும் திறமையும் கண்டு பலர் பூரிப்பில் வியக்கின்றனர்.இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.