ஆயுள் கைதிக்கு., இல்லற வாழ்க்கை நடத்த அனுமதி.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் கைதி ஒருவருக்கு., இல்லற வாழ்க்கை நடத்த 15 நாள் பரோல் கொடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 28). மனைவி முத்துமாரி. பெருமாள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடலூர் மத்திய கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் எனது கணவர் பெருமாளோடு, இல்லற வாழ்வுக்காக அவருக்கு 2 வார காலம் பரோல் வழங்க வேண்டும் என பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணையின் போது, ”அனைத்து குற்றவாளிகளுக்கும் தங்களது இல்லற வாழ்வை தொடர உரிமை உண்டு” என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி முத்துமாரி அவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம், ”பெருமாளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பரோல் வழங்குவதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

மேலும் அந்த உத்தரவில், ”சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் பெருமாளின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யவேண்டும் என்றும், இது குறித்த அறிக்கையை சிறை துறை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.