ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தில் இந்துமதி (83) சாந்தாமுனி (63 ) என்ற சகோதரிகள் 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு பரமக்குடியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவரும் மாட்டிக்கொண்டனர்.
இதில் இந்துமதி, இடிபாடுகளில் சிக்கி பலியானார். சாந்தாமுனியை படுகாயங்களுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.