விஜய் டி.வியின் “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர். அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. பி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’ படத்திலும், விஷால் – சமந்தா நடித்த ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்களில் நடித்து திரை உலகுக்கும் அறிமுகமானவர். இடையிடையே விஜய் டி.வி நிகழ்ச்சிகள் என கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை என்று கூறும் அளவிற்கு மேடை காமெடிகளிலும், விஜய் தொலைக்காட்சியிலும் தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.
பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்து காமெடி என்றால் ஆண்கள் தான் என்ற மாயசுவரை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தவர்.
அப்படிப்பட்ட காமெடியனாக பார்க்கப்படும் அறந்தாங்கி நிஷா இன்றைக்கு கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்துள்ள உதவி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுதலை பெற்று வருகிறது.
அறந்தாங்கி நிஷா அக்கா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னால் முடிந்த அத்தியாவசிய பொருட்களை நேரடியாகவே சென்று வழங்கி வருகின்றார்.
சிலர் திரையில் ஹீரோவாக நடித்துவிட்டு, நிஜத்தில் ஒன்றுக்கும் உதவாத ஜீரோவாக இருக்கும் நிலையில், தன்னை காமெடியனாக முன்னிறுத்தி கொண்டு நிஜவாழ்வில் ஹீரோவாக விளங்கும் இவரை போன்றவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.