சொத்துகுவிப்பு வழக்கின் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்து பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட 12 பேர், சசிகலாவை சந்தித்தனர்.
நேற்று மதியம் 12.15 மணி 2.10 மணி வரை 2 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் வருகிற மக்களவை தேர்தலில் யார்தான் கூட்டணி கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க உள்ளதை சசிகலாவிடம் தெரிவித்தோம். இது சரியான முடிவு என சசிகலாவும் சொல்லி இருக்கிறார்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாமல் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வினர் தடுத்துவிட்டனர். இப்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக செயல்படுவது போல் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் காட்டிக்கொள்கின்றனர்.
நாங்கள் ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளோம். எனவே வரும் தேர்தலில் ஒட்டுமொத்தமாக எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என தெரிவித்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர்.