வேலூர் மாவட்டம் கீழ்மொணவூர் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது இவரின் மனைவி அனிதா வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அனிதாவிற்கு 28 வயதாகும் நிலையில், தம்பதியினருக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் திடீரென்று அனிதா மாயமானார்.
எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் நேற்று வேலூர் அருகே உள்ள சதுப்பேரி ஏரியில் மர்மமான முறையில் அனிதா இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஏரியில் இருந்து அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்த பொழுது நைட்டி அணிந்திருந்த அனிதாவின் வாய், மூக்கில் ரத்தம், நுரை வந்திருந்த தடையம் காணப்பட்டது.
மேலும் அவரது முகத்தில் சிறு, சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன. பின்னர் முறைப்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது கொலையா..? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.