பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜகவையும், மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
அதன் ஒருபகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அப்போது கூறினார்.
அதன்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை நாளை சந்திரபாபு நாயுடு சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். தென் இந்தியாவில் பாஜவின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இந்த சந்திப்பு இருக்கும் மேலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.