மெரினாவில் பெண் கொடூர கொலை: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு பாலியல் தொழிலில் ஏற்பட்ட போட்டியும், பொறாமையே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

சென்னை மெரினா பீச்சில் உள்ள நீச்சல் குளம் அருகில் மிக மிக கொடூரமான முறையில் ஒரு பெண் அடித்து கொலை செய்யப்பட்டு, அவரது மர்ம உறுப்பில் பீர் பாட்டிலை குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்த போலீசார், இந்த கொலை கண்டிப்பாக செக்ஸ் தகராறில்தான் நடந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் கொலையான பெண் 35 வயதுடைய மதுரையை சேர்ந்த கலைச்செல்வி என்றும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கொலையான பெண்ணின் செல்போனை கொண்டு அடுத்தடுத்த விசாரணையில் இறங்கிய போலீசார், கலைச்செல்வி அவரது கணவருடன் நடந்த  சண்டை காரணமான கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். மேலும் இவர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் எப்பவுமே பீச் பக்கமே சுற்றி கொண்டு இருந்திருக்கிறார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரிடம் கலைச்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு, இவர்களிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். தொடர்ந்து கலைச்செல்வி கொலை தொடர்பாக வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2 நாளாக தீவிர விசாரணை நடத்திய நிலையில்  டிரைவர் பிரேம்குமாரும், அவரது நண்பர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்பவரும்தான் இந்த கொடூரமான கொலையை செய்தது என்று தெரியவந்துள்ளது.

கலைச்செல்லி கொலை தொடர்பாக கொலையாளி  பிரேம்குமார் கூறியதாவது:

மதுரையிலிருந்து வந்த கலைச்செல்வி விபச்சாரம் செய்ய மெரினாவுக்கு அடிக்கடி வந்து போவார். அப்படி வரும்போதெல்லாம் எங்களைதான் அழைப்பார். கலைச்செல்வியுடன் நாங்கள் தொடர்ந்து பழக்கம் வைத்து கொண்டோம். அப்போது கலைச்செல்வியுடன் மற்றொரு பெண் கூடவே வந்தார். அவளை எங்களுக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் மிகவும் நெருக்கமானோம். அப்போது ஒருநாள், “கலைச்செல்வி மதுரையிலிருந்து எப்ப சென்னை வந்தாலும், என் விபச்சார தொழில் கெட்டு போகுது” என்று புலம்புவார். இதனால் நாங்கள் கலைச்செல்வியுடனான தொடர்பை கட் பண்ணிட்டோம். ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு பீச்சுக்கு வந்த கலைச்செல்வி வழக்கம்போல எங்களை கூப்பிட்டாள். நாங்களும் போனோம். எல்லோருமா சேர்ந்து ஒன்னா தண்ணி அடிச்சோம். அப்புறம் எல்லாருமே ஜாலியா இருந்தோம்.

தொடர்ந்து, ஏன் என்னிடம் முன்பு போல் இருப்பதில்லை என்று கலைச்செல்வி பேச்சை ஆரம்பிச்சார். நாங்கள் ஏதேதோ காரணம் சொல்லியும், விடாப்பிடியாக இதையே கேட்டு கேட்டு தொந்தரவு செய்தார். ஏற்கனவே போதையில் இருந்த நாங்கள் பக்கத்திலிருந்த பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடிச்சோம். அவள் வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி போட்டோம். ஆனா தலையில அடிச்சப்பவே அவள் இறந்து விட்டாள். அவர் உடலை எங்க கொண்டு சென்றாலும், மாட்டிக் கொள்வோம்  என நினைத்து அங்கயே கொஞ்சமா குழியை தூண்டி உடலை போட்டோம். எங்களுக்கு இருந்த பயம், பதட்டத்தில் குழியை ரொம்ப ஆழமா வெட்டாம விட்டுட்டோம். அதான் இப்படி மாட்டிக்கிட்டோம்” என்றனர்.

இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.