இந்தியாவில் சானிட்டரி நாப்கின் அணிந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக மாணவிகளிடன் ஆடைகளை களைத்து சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தில் குந்தால் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கிருந்த அரசுப்பளியில் நடந்த அராஜகச் செயலின் வீடியோ ஒன்று வெளியானது.
அதாவது பள்ளியில் இருந்த கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதால், அதை கண்டுபிடிப்பதற்காக ஆசியர்கள் மாணவிகளின் ஆடைகள் முழுவதும் களைத்து, அவர்கள் சானிட்டரி நேப்கின் அணிந்திருக்கிறார்கள் என்று சோதனை நடத்தியுள்ளனர்.
அதில் சில மாணவிகள் அவமானம் தாங்கமுடியாமல் அழுதபடி தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் இந்த விவகாரம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதால், அவர் உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்விச்செயலர் கிருஷன் குமார் திங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் 2 ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.