மத்திய பிரதேச மாநிலத்திற்கு இந்த மாதம் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏறக்குறைய தமிழகத்தை போலவே 230 தொகுதிகளைக் கொண்டது மத்தியப்பிரதேச மாநில சட்டசபை.
தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ளதால்அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக முதல்வர் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
பலகட்ட கலந்தாய்வுகள் நடத்திய பின்னரே பாஜக தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் தேவி சிங் படேல் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்ப்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தேவி சிங் படேல். அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.