சாலை ஓரமாக நடந்து சென்ற பாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் வயதான மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில், நேற்று அதிகாலை வயதானப் பெண் ஒருவர், நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக வந்து சாலையின் ஓரத்தில் பயங்கரமாக மோதியது.

மேலும் அதனால் கார் பலமுறை அந்தரத்திலேயே பல்டியடித்தது

அவ்வாறு பல்டியடித்து வந்த அந்த கார் சாலை ஓரமாக நடந்து வந்த 60 வயது மூதாட்டியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் வாகனத்தில் வந்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.