அமெரிக்காவில் மலையை ரசிக்க சென்ற இந்திய ஜோடி, 800 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா கலிபோர்னியாவில் மிக உயரமான மலைகள் கொண்ட யோசேமிட் தேசிய பூங்கா மிகவும் பிரபலமானது. இங்கு பல சுற்றுலாவாசிகள் ஆர்வமுடன் வருகைதந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த பூங்காவில் உள்ள மலையின் டாப்ட் பாய்ண்ட் என்னுமிடத்தில் இருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து யோசேமிட் தேசிய பார்க் மீட்பு படையினர் மலைக்கு கீழ் இறங்கி மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
பின்னர் உயிரிழந்தவர்கள் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இவர்கள் இந்தியாவைச் சேர்ந்த விஷ்ணு விசாந்த் மற்றும் மீனாட்சி மூர்த்தி என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் நியூயார்க் நகரில் வசித்து வந்த இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு சான் ஜோஸ் பகுதியில் குடியேறி உள்ளனர். விஷ்ணு விசாந்த் அங்கு இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவ்வாறு உலகின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்த இவர்கள் யோசேமிட் தேசிய பூங்காவில் உள்ள மலையின் டஃப்ட் பாயின்ட் என்ற புள்ளிக்கு சென்று இருக்கிறார்கள்.
மேலும் அங்கிருந்து அவர்கள் போட்டோ எடுக்க முயன்றபோது வழுக்கி இருவரும் மலைப்பள்ளத்தில் விழுந்து பரிதாபமாகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.