வலது கையில் நகக்கீறல்.. தூக்கில் தொங்கிய மகள் – கதறியபடி தாய் சொன்ன தகவல்.!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்க ன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் மனைவி நாகலட்சுமி.

ஏழு மாத கர்ப்பிணியான இவர் கடந்த 26-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.

இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனவும் நாகலட்சுமியின் தாய் குமுதா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து அந்த மனுவில், கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவருக்கு என் மகள் நாகலட்சுமியை திருமணம் செய்து கொடுத்தோம்.

அப்போது பாண்டியராஜன், அவரது தந்தை காளிதாஸ், தாய் ராணியம்மாள் ஆகியோர் 15 பவுன் தங்க நகை, சீர்வரிசைப் பொருட்களை வரதட்சணையாகக் கேட்டனர்.

நாங்கள் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தோம். தற்போது என் மகள் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தச் சூழலில், பாண்டியராஜன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து இன்னும் ஐந்து பவுன் நகை, தீபாவளிக்கு பைக் வாங்கித் தரவேண்டும் எனக் கூறி சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே இதை என் மகள் என்னிடம் கூறி அழுதார்.

இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி காலை என் மகள் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கையில் வெட்டுக்காயம், வலது கையில் நகக்கீறல் இருந்தது.

என் மகளை குடிபோதையில் பாண்டியராஜ் அடித்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். அவரது பெற்றோரும் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

ஆனால் இதுவரை அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. எனவே குற்றவாளிளைக் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.