கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமம் அடைகலபுரம். இந்த கிராமத்தை சார்ந்தவர் பால்ராஜ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 10 வயதுடைய மாணவியை., கடத்த 2015 ம் வருடம் ஜூலை 22 ம் தேதியன்று மதியஉணவு இடைவெளியில் தனது வீட்டிற்கு., நல்ல விதமாக பேசி அழைத்து சென்றுள்ளார்.
இவரின் பேச்சை கேட்ட சிறுமி அவரது இல்லத்திற்கு செல்லவே., அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவிக்கவே., இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் புகார் மனுவை ஏற்ற தேன்கனிக்கோட்டை மகளீர் காவல் துறையினர் பால்ராஜின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கானது கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் நேற்று வெளியனான தீர்ப்பில் சிறுமியை பலாத்காரம் செய்த பால்ராஜிற்கு சுமார் 5 வருட சிறைத்தண்டனையும்., ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தனது தீர்ப்பை வழங்கினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிறுமியின் உறவினர் ஒருவர் இது போன்ற குற்றங்கள் செய்பவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும்., ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்குவது எந்த விதத்தில் நியாயம்., இவர்களை போன்ற மிருகங்களை தூக்கு தண்டனை தீர்ப்பளித்து அவர்களை இந்த மண்ணில் எந்தவிதமான செயல்களை செய்வதற்காக விட்டுவைக்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.