சோகத்தில் மூழ்கும் தமிழகம்..! தொடரும் உயிரிழப்பு! ஒன்றரை வயது குழந்தை பலி!

கடந்த சில நாட்களாக சென்னையில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் சுகாதாரத்துறை இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை என அரசை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டெங்குவால் தொடர்ந்து பலி அதிகரித்து வருகிறது. குழந்தைகளை குறி வைத்து டெங்கு தாக்கி வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்னர் 7 வயது குழந்தைகள் இருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு எழும்பூர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவி வருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது குழந்தை தருண் பரிதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு உருவாக குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பதால், முறையாக மூடிவைக்காமல் பயன்படுத்தும் குடிநீரில்கூட எளிதாகக் கொசுக்கள் உருவாகிவிடுகின்றன. அதனால் அனைவரும் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாளொன்றுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 30-50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.