நடத்தையில் சந்தேகம் கொண்ட கொடூர கணவன் , இறுதியில் நேர்ந்த விபரீதம்.!

தன் கணவரின் கொடுமையால் பெண் ஒருவர் உடல்நலம் சரியில்லாத தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருபவர் முஸ்தபா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷபானா. இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இதில் 12 வயது நிறைந்த அவர்களது மூத்த மகனுக்கு இதய நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர்களது மற்ற இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொண்டே இருந்தது.

ஆனால் இந்த நிலையில் முஸ்தபா சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் . மேலும் வீடு செலவிற்கு கூட பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மனைவி ஷபானாவின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பொறுமையாக காலம் கழித்து வந்த ஷபானா தங்களது குடும்ப வறுமை, குழந்தைகளின் உடல்நிலை மற்றும் கணவரின் கொடுமையால் வாழ்க்கையை வெறுத்துள்ளார்.

பின்னர் சில தினங்களுக்கு முன்னர் அவர் தனது தாய்க்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி ஊரை விட்டு மாயமாகியுள்ளார்.

அதில், தனது கணவன் முஸ்தபா குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை,மேலும் என்மீதும் சந்தேகம் கொண்டு தினமும் என்னை கொடுமைப்படுத்துகிறார்.மிகவும் கஷ்டமாக உள்ளது.

எனக்கு இந்த உலகில் வாழ விரும்பவில்லை, என் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்ய விரும்புகிறேன் என அனுப்பியுள்ளளார்.

பின்னர் இது குறித்து ஷபானாவின் தாய் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் ஷபானா மற்றும்அவரது பிள்ளைகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.