ஆசைவார்த்தைகள் பேசி யுவதியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்….!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (18) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றிவரும் பெரியநீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த ஆசிரியரை பொலிசார் கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதுடன் சிறுமி அம்மம்மாவுடன் வாழ்ந்துவருகின்றார்.

இந்த நிலையில், குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி ஞாயிறு கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும், பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்துள்ளார். என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, இதில் கைது செய்யப்பட் ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.