#MeToo வில் சிக்கிய வைரமுத்து வைத்தியசாலையில் அனுமதி!

மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இந்தியாவில் புயலாக வீசிய #MeToo வைரமுத்துவை தாக்கிக் கொண்டே தமிழகத்திற்குள் நுழைந்தது.

தனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், பின்னனி பாடகி சின்மயியும் வைரமுத்து மீது மீ டூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.