சரஸ்வதி பூசைக்கு தடை போட்ட நிர்வாகம்….!! பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த தாதியர்கள்…!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களை நவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து இன்று தாதிய கல்லூரிமாணவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்புகொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 47 வைத்திய சிகிச்சைப் பிரிவுகளிலும்!
தாதியபாடசாலை ஆலயத்திலும் நவராத்திரி பூஜை சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணைப்புச் செய்தி …

சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களை நவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து இன்று தாதிய கல்லூரிமாணவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்புகொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவர் கொழும்பிற்கு மாற்றம் பெறுகின்றார் எனவும் அதிபர் அறிவித்துள்ளார்.