ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த நளாயினி என்பவருக்கும் சின்ன ஏர்வாடியை சேர்ந்த ஆனந்த பிரகாசுக்கும் பிரகாஷ்க்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று உள்ளார். தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆனந்த பிரகாஷ் செய்துள்ளார். விமான டிக்கெட்டை அவர் அனுப்பிய நிலையில் கடந்த 7ம் தேதியில் இருந்து நளாயினி காணவில்லை.
இது குறித்த ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரித்தபோது நளாயினி, தனது காதலன் வெண்ணிலவனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இருவரையும் அழைத்து விசாரித்தபோது கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்தது, பெற்றோருக்கு தெரிந்ததால் அவசரமாக திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. நளாயினி, காதலருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் விரும்பியவருடன் வாழ நளாயினிக்கு உரிமை உண்டு என கூறியதால் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.