நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்! பிரபல நடிகை பரிந்துரை!

நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழ் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியிட்டுள்ளனர். மேலும், அதில், நித்யானந்தாவை கடவுளாக்கி ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளனர்.

இப்பாடலில், அவரது ஜடாமுடி மீசை பற்றியெல்லாம், பாடல் பாடப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த கஸ்தூரி நித்யானந்தாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கிண்டலாக டுவிட் செய்துள்ளார்.