வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார். 24 வயது நிறைந்த இவரும் வண்கயழகுதேம் பகுதியை சேர்ந்த 12-ம் மாணவி சாய் தீபிகாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு தீபிகாவின் குடும்பத்தாரிடமிருந்து பெரும் எதிர்ப்பு வந்துள்ளது. மேலும் வரும் தீபாவளியுடன் தீபிகாவிற்கு 18 வயது பூர்த்தியடைவதால், இருவரும் சேர்ந்து திருமணம் செய்துகொள்ளலாம் என குமார் திட்டமிட்டிருந்துள்ளார்.
இந்த விவகாரம் தீபிகாவின் வீட்டிற்கு தெரியவர, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து போலீசார் குமாரை எச்சரித்துள்ளனர்.
ஆனால் அதனையும் மீறி நேற்று குமார் தீபிகாவை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் குமார் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குமாரின் உறவினர்கள் பல பகுதிகளிலும் தேட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் வண்கயழகுதேம் கிராமத்திற்கு அருகே குமாரின் உடல் வெட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளது. தகவலறிந்த தீபிகா கதறி அழுதுள்ளார்.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீபிகாவின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குமாரின் உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .