ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள மேலுமலை காட்டு பகுதியில் நின்று கொண்டு 2 வயதுள்ள சிறுமி ஒருவர் மழையில் நனைந்தபடி நின்று அழுதுகொண்டிருந்துள்ளார். அந்த வனப்பகுதி, மிகவும் அடர்ந்த காட்டுபகுதியாகும்.
அப்பகுதி வழியே சென்ற பாலு என்பவர் அந்த சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, சிறுமி மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளார்
அதற்கு அந்த சிறுமி கன்னட மொழியில், தந்தையின் பெயரையும், தாயின் பெயரையும் கூறிய சிறுமிக்கு, தன்னுடைய பெயரை சொல்ல தெரியவில்லை. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாலு, உடனே சிறுமியை மீட்டு அவரது நண்பர் வீட்டில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெயரை சொல்லத்தெரியாத அளவிற்கு இருக்கும் இளம் சிறுமியை தவிக்கவிட்டு சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.