நிகழ்ச்சி ஒன்றி பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன், ”எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஓபிஎஸ் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி நடத்தும் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அமமுக அமைப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ”கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தினகரன் நண்பரிடம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பேச வேண்டும் என நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டதாகவும் அதேபோல கடந்த வருடம் ஜூலை மாதம் 12ம் தேதி கோட்டூர்புரம் இல்லத்தில் தினகரனை சந்தித்ததாகவும்” ஆதாரங்களை வெளியிட்டு தமிழக அரசியலை அதிர வைத்துள்ளார்.
இந்நிலையில், மதுரையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்து இன்று காலை சென்னை புறப்பட்டு செல்ல மதுரை விமானநிலையம் வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர், ”அவரது பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, எனவே இதற்கான பதிலை பின் தெரிவிப்பதாக” தெரிவித்தார்.
தினகரனை நீங்கள் சந்தித்தீர்களா? என்று செய்தியாளர்கள் மீண்டும்., மீண்டும் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ஓபிஎஸ், ”சென்னைக்கு சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் விரிவாக பேசுகிறேன். அது கடந்த காலம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுகவுடன் கட்சியை இணைக்க தூதுவிட்டார் டிடிவி.தினகரன் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மேலும், அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.