தமிழ் மொழியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள்??

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

முதலிடம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை – மகேந்திரன் திகாலோலிபவன் – 198, முதலிடம் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை – நவாஸ்கன் நதி – 198, இரண்டாம் இடம் வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை – பாலகுமார் ஹரித்திகன் சுஜா – 197, மூன்றாம் இடம் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – நேசிகா சம்தினேஷ் – 196 , மூன்றாம் இடம் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி – சுகா சாகீர் மொஹமட் – 196