பெண் மருத்துவரை ஆசை காட்டி 10 நாட்கள் உல்லாசம் அனுபவித்த இளைஞர்!. திடுக்கிடும் தகவல்கள்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் டாக்டருக்கும், சேலத்தை சேர்ந்த ஒரு என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக அடிக்கடி பேசி வந்தனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

எத்தனை நாட்களாக பார்க்காமலே தூரத்தில் இருந்து காதலிப்பது என்று எண்ணிய அவர்கள் நேரில் சந்திக்க முடிவு செய்தார் என்ஜினீயர். இந்த நிலையில் நேரில் சந்திக்க வேண்டும் என்று பெண் டாக்டரிடம் என்ஜினீயர் கூறி உள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம், சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சேலம் சென்றுள்ளார்.

அங்கிருந்து சேலத்திற்கு வந்த பெண் டாக்டரை காரில் சென்று வரவேற்ற என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். அந்த ஓட்டலில் கணவன்-மனைவி போல 10 நாட்கள் தங்கியிருந்த அந்த இளம் ஜோடியினர் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலின் ரெஸ்டராண்டுக்கு அவர்கள் வந்த பொது திடீரென அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவரது காதலரான என்ஜினீயர் ஆகியோர் பெண் டாக்டரிடம் விசாரித்தனர். அப்போது வலி நிவாரண மாத்திரை அதிகம் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

உடனடியாக ஹோட்டல் நிர்வாகிகள் காவ துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அந்த என்ஜினீயரின் வீட்டிற்கும், பெண் மருத்துவர் வீட்டிற்கும் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 10 நாட்கள் ஹோட்டலில் உல்லாசமாக இருந்துவிட்டு, பெண் மருத்துவரிடம் 25 லட்சத்தை செலவுக்கு வாங்கிக்கொண்டு திருமணம் செய்ய காதலனான என்ஜினீயர் மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றத்தில் தூக்க மாத்திரை தின்று பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.