தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜகவுக்கு பேரிடி.!!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள், மணிலா காட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது.

அடுத்து பாஜக தலைமையிலான ஆட்சியா, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று பிரபல தொலைக்காட்சியும்- சிவோட்டரும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இந்தியாவின் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் கருத்து கணிப்பு முடிவுகள் தேசிய கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

மற்ற தென்மாநிலங்களில் தேசிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட வாக்கு வங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது மாநில கட்சிகளை வைத்தே முடிவு செய்படுகின்றன.

தற்போது வெளியாகியுள்ள இந்த கருத்து கணிப்புகளும் இதையே காண்பிக்கிறது, பிரபல தொலைக்காட்சியும்- சிவோட்டரும் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவின் படி தென்மாநிலங்களில் மொத்தம் உள்ள 129 பாராளுமன்ற தொகுதிகளில்.,

* மாநில கட்சிகள் 76 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெறும் என்றும்,

* பாஜக கூட்டணி 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.