21 வயதில்.. ஓய்வு அறிவித்த சர்வதேச கிரிக்கெட் வீரர்..! ரசிகர்கள் அதிர்ச்சி…!

ஹாங்காங் வீரரான கிறிஸ் கார்டர் இதுவரை 11 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 21 வயதான இவர் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என பல திறமைகளை தன்னுள் வைத்து இருந்தவர். இந்நிலையில், இவர் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங் அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் கிறிஸ் கார்டர் இடம்பெற்றார்.

விமானம் ஓட்டுவதே கனவாக கொண்டுள்ள கார்டர், விமானப் பயிற்சிப் பள்ளியில் இணைந்துள்ளார். அடிலெய்ட் சென்று பயிற்சிப் பள்ளியில் இணைந்து பிறகு கேத்தே பெசிஃபிக் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றவுள்ளார்.

ஹாங்காங் நாட்டில் பிறந்த கிறிஸ் கார்டர், கடந்த 2015-ல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்நிலையில் அவருக்கு அரசாங்கமே, ஐசிசியோ எந்தவித நிதியுதவியும் தருவதில்லை. ஏற்கெனவே அவர் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கிரிக்கெட்டில் ஈடுபட்டார். இப்போது தனது கனவை நோக்கி பயணிப்பதற்காக தான் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். 21 வயதில் ஒரு சர்வதேச வீரர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.