ரபேல் விமான ஊழலும் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொய்களும்!

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகத் தொடர்ச்சியாக மாறி மாறிப் பேசி முரண்பட்ட தகவல்களைக் கூறிவருகிறார். அவர் அளித்துவரும் தவறான தகவல்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெடுக்கு (எச்ஏஎல்) இந்தியாவிலேயே ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் திறன் இல்லாததால் 126 ரஃபேல் ஜெட் விமானங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஐமுகூ அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக எச்ஏஎல் எம்.ஐ.ஜி சுகோய் மிராஜ் போன்ற விமானங்களை வெற்றிகரமாகத் தயாரித்து லைசன்ஸ் பெற்றுள்ளதையும் , தேஜா ரக விமானங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ளதையும் வல்லுநர்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு நினைவுறுத்துகிறார்கள். டஸால்ட்டின் தொழில்நுட்பப் பரிமாற்றம் எச்ஏஎல்இன் திறன்களை அதிகரிப்பதோடு உள்நாட்டு உற்பத்தித் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் டஸால்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக்ட்ராப்பர் பாரீஸில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கையில் எச்ஏஎல் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

2) எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எச்ஏஎல் தயாரிக்கக்கூடிய விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்படும் விமானத்தைக் காட்டிலும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கும் என்று டஸால்ட் கருதியது. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இந்தியாவில் அதிக செலவு பிடிக்கத்தான் செய்யும் . ஆனால் உள்நாட்டு உற்பத்தித் திறனை நாளடைவில் மேம்படுத்திக் கொள்ள நாடுகள் அத்தகைய முதலீட்டைச் செய்கின்றன.

3) எச்ஏஎல்லின் திறமையைக் குறித்து மதிப்பிட வேண்டும் என்று எனக்குத் துளிக்கூட எண்ணமில்லை. ஆனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ”நாங்கள் தேவைப்படும் எல்லா உதவிகளையும் எச்ஏஎல்லுக்கு அளிப்போம்” என்று ஏன் கூறவில்லை? நினைத்தால் அவர் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

4) மே – 2014 க்கும் ஏப்ரல் 2015 – க்கும் இடையேயான காலகட்டத்தில் NDA அரசாங்கம்தான் டஸால்ட் மற்றும் எச்ஏஎல் உடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. எச்ஏஎல் –க்குத் தேவையான வசதிகளை உருவாக்கித் தந்து அதனை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு மோடி அரசுக்குத்தான் இருந்திருக்க வேண்டும்.

5) UPA அரசுதான் எச்ஏஎல் – ஐ வஞ்சித்து விட்டது. UPA ஆட்சியின்போது இந்த ஒப்பந்தம் நிகழவில்லை. மேலும் எச்ஏஎல்- க்கும் டஸால்ட் – க்கும் இடையே உற்பத்தி சார்ந்த விதிகளில் ஒத்த கருத்து எட்ட முடியாத நிலையும் UPA ஆட்சியின் போதுதான் ஏற்பட்டது. ஆகவே எச்ஏஎல் – க்கும் ரஃபேலுக்கும் ஒத்துவரவில்லை. இப்போது புரிகிறதா யாரால் எச்ஏஎல் – வுடன் இணக்கமாகச் செல்லமுடியவில்லை என்றும் இந்த விஷயம் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது நிகழ்ந்தது என்றும்?

6) அவ்வாறாயின் மார்ச் 25, 2015இல் டஸால்ட்டின் சி.இ.ஓ., எச்ஏஎல்லுடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்றது என்றும் அது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் 95 சதவீதப் பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டுவிட்டன என்றும் கூறுவானேன்? எரிக் டிராப்பர் பாரீஸில் இவ்வாறு கூறியது அதிகாரபூர்வத் தகவல் ஆகும்.

7) NDA அரசாங்கம் தனது விமானங்களின் எண்ணிக்கையை 126 – ல் இருந்து 36 – ஆகக் குறைத்துவிட்டது. ஏனெனில் இந்திய விமானப் படை (IAF) 126 போர் விமானங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் – நிறுத்தும் இடம் மற்றும் பராமரிப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.

8) இந்திய விமானப் படைக்கு 42 – ஸ்குவாட்ரன்கள் (விமானப் படைத் தொகுதி) ஏற்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதனிடம் 33 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளது. ஒரு காலத்தில் விமானப் படையிடம் 37 ஸ்குவாட்ரன்கள் இருந்துள்ளன. ஆகவே இப்போது இந்திய விமானப் படையிடம் 126 விமானங்களை நிறுத்தும் இடவசதி இல்லை என்று கூறப்படுகிறது. (எனினும் ஏழு ஸ்குவாட்ரன்கள் என்பது அதிகபட்சமானது – அநியாயமானது). மேலும் 108 ரஃபேல் ரக விமானங்களையும் தயாரிப்பதற்கு ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் பிடிக்கும். இது இந்திய விமானப் படைக்கு அதனுடைய நிறுத்தும் இட வசதியை அதிகரித்துக் கொள்ளப் போதுமான கால அவகாசத்தைக் கொடுக்கும்.

9) 526 டாலர் கொடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு விமானமும் எவ்வித சிறப்பம்சமும் இல்லாத வெறுனே பறக்கவும் தரையிரங்கவும் மட்டுமே செய்யக்கூடியது. அதில் வான் பயண மின்னணுவியல் (Avionics) ஆயுதம் தாங்கக்கூடிய வசதிகள் மற்றும் உபரி பாகங்கள் போன்ற அதனை ஒரு முழுமையான போர் விமானமாக மாற்றக்கூடிய எந்த அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஐமுகூ அரசாங்கம் ஒப்பந்தம் செய்ததை விட இப்போது வாங்கப்படும் விமானம் மேற்கூறிய எல்லா வித முக்கிய சேர்க்கைகள் கொண்ட மிகவும் மேம்பட்டதாக இருக்கும்.

10) அப்படியானால் இந்தியா – பிரான்ஸ் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இப்போதைய புதிய இரு அரசாங்களுக்கும் இடையே ஏற்படுத்தப் பட்டுள்ள ஒப்பந்தம் 2008இல் இந்திய விமானப் படையால் கோரப்பட்ட அதே அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன்?

11) இப்போதைய அரசாங்கம் கூடுதல் சேர்க்கைகளுடன் சிறப்பம்சங்கள் கொண்ட ரஃபேல் ரக விமானங்களை ஐமுகூ அரசாங்கம் ஒப்புக்கொண்டதைவிட 9% குறைந்த விலையில் வாங்குகிறது.

12) தேஜகூ அரசாங்கம் ஐமுகூ அரசாங்கத்தைவிடக் குறைந்த விலையில் விமானங்களை வாங்குகிறது என்றால் ஏன் ஐமுகூ அரசாங்கம் 126 விமானங்கள் வாங்குவதற்காக பேரம் பேசிய விலையில் அதிக விமானங்களை வாங்கக் கூடாது? ஐமுகூ அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி 126 விமானங்களுக்கான விலையைக் கிட்டத்தட்ட முழுவதுமாகச் செலுத்திவிட்டு ஏன் 36 விமானங்கள் மட்டுமே வாங்க வேண்டும்?

13) ரஃபேல் போர் விமானங்களின் விலையை வெளிப்படுத்துவது என்பது நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொள்வதாக அமைந்துவிடும். ராகுல் காந்தியின் ஈகோவைத் திருப்திப் படுத்துவதற்காக ஏவியானிக்ஸ் பற்றிய தகவல்கள், வெடிபொருட்கள் மற்றும் நாட்டின் சூழலுக்குத் தக்கவாறு இந்த அதி நவீன போர் விமானங்களில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.

14) அரசாங்கம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் இரண்டு முறைகள் விலையைக் குறித்த தகவல்களை வெளியிட்டுவிட்டது. நிர்மலா சீதாராமன்கூட ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கையில் விலையைப் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப் படும் என்று அறிவித்தார். இப்போதும் கூட தேஜகூ வின் ரஃபேல் ஒப்பந்தம் ஐமுகூ அரங்கத்தால் ஒப்பந்த்ம் செய்யப்பட்டதை விட 9% மலிவானது என்றே கூறிவருகிறார். ஆகவே இந்த விஷயத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை என்று வெளிப்படைத் தன்மையோடு இருப்பதிலிருந்து அவரை எது தடுக்கிறது?