மிக மோசமாக பேசிய நடிகர் கருணாஸ்!

பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகரும் எம்எல்ஏ-வுமான கருணாஸ் மிரட்டல் தோனியில் மோசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் கருணாஸ், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார்.

கருணாஸ் பேசுகையில், சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று பொலிஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க.

அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும்.

வரலாறு எனக்கும் பேசத் தெரியும். சட்ட மன்றத்திலேயே பேசினவன் தான் நான்.

உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம் என பேசியுள்ளார்.