12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..! ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவு..!

12-ஆம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதற்கு அந்த பள்ளியின் ஆசிரியரே காரணம் என்று உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.!

கோபிசெட்டிபாளையம் அருகே பட்டிமணியகாரன்பாளையத்தில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதி இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாணவி இறந்ததற்கு காரணம் அந்த பள்ளியின் ஆசிரியர் சண்முகம் என்பவர் தான் காரணம் என்று உறவினர்கள் தெரிவித்து அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.

அந்த மாணவிக்கு, ஆசிரியர் சண்முகம் கொடுத்து வந்த பாலியல் தொந்தரவே மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்று கூறி, மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.