காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இளைஞன் செய்த கொடூரம்..

காதலிக்க மறுத்த பெண்ணை 38 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மத்தியப் பிரதேச மாநிலத்தில் வசித்து வந்தவர் சுப்ரியா ஜெயின். நேற்று முன்தினம் இரவு இவரை 25 வயது வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்ரியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரது உடலில் 38 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து கமலேஷ் சாஹு என்ற வாலிபரை கைது செய்து, அவனிடம் நடத்திய விசாரணையில், காதலிக்க மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.