‘அம்மா’ என கத்திய முதியவர்… இரக்கமின்றி தலையை சிதைத்த சிறுவன்!

இராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த முதியவரின் தலையை கல்லால் அடித்து சிதைத்து விட்டு, 16 வயது சிறுவன் பணத்தை திருடிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏகாம்பரம் என்ற முதியவர், வேலை செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டில் ஏகாம்பரம் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது சுவற்றின் மீது ஏறிக்குதித்த 16 வயதுள்ள சிறுவன், கையில் ஒரு பாறாங்கல்லை கொண்டு முதியவரின் தலையில் கொடூரமாக தங்கியுள்ளான்.

இதில் வலி தாங்க முடியாமல் அந்த முதியவர் ‘அம்மா’ என கத்துகிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் போதையில் இருந்த அந்த சிறுவன் வேகமாக முதியவரை தாக்கி, அவருடைய சட்டைப்பையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்கிறான்.

இந்த சம்பவத்தில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பொலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.