நீரில்லாத உலகம் – நாமே பொறுப்பாளிகள் 2035.! விழிப்புணர்வு குறும்படம்.!!

நீரின்றி அமையாது உலகு – இது வள்ளுவனின் வாக்கு.

நமது உலகத்தில் நீர் இல்லையெனில், இந்த உலகமே உருவாகியிருக்காது என்பதே இந்த குறளின் ஆழமான அர்த்தமாகும்.

இந்த உலகத்தில் நீர் இல்லையெனில் எந்த வித உயிரினமும் உருவாகியிருக்காது, நீரின் உதவியாலே இவ்வுலகில் உயிரினம் தோன்றியது.

அவ்வாறு நீரின் உதவியாலேயே உருவான உயிரினம் பின்னாளில் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து இன்று ஆறறிவுள்ள மனிதனாகவும், பல உயிரினங்களாகவும் உருப்பெற்றது.

இந்த உலகம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலங்களை வைத்துள்ளது, மற்ற இரண்டு பங்கும் நீரினால் சூழப்பட்டுள்ளது.

நீரினால் இந்த உலகம் உருவானது., இன்று நாம் இந்த நீரை எந்த முறையில் பாதுகாத்து வருகிறோம் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்போது வரை தண்ணீருக்காக நாம் நமது அண்டை மாநிலங்களில் சண்டையிட்டுதான் வருகிறோம். ஒரு காலத்தில் விவசாயத்தில் செழிப்பாக இருந்த நமது நாடு தற்போது விவசாயிகளின் இறப்பையே கண்டு வருகிறது.

விவசாயிகளின் இறப்பிற்க்கு முதல் மற்றும் முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை என்பதே!…..

ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த நிலங்கள் இன்று வறண்ட பூமியாக மாறியதற்கு காரணம் யார்?….

ஒரு காலங்களில் முப்போகமும் விளைவித்து மகிழ்ச்சியாக இருந்த நமது விவசாயிகள் தற்போது ஒரு போகம் விளைவிப்பதற்கே பெரும் பாடாக உள்ளது என கூறுவது யாரால்?…..

நதிகள்,ஏரிகள்,குளங்கள்,கண்மாய்கள்,கால்வாய்கள்,ஆறுகள் போன்றவை நீரின் உயிர் நாடிகள்., அது இப்போது எங்கே?…..

எந்த ஊருக்கு சென்றாலும் வழி நெடுக மரங்கள் இருக்குமே மழைக்கு ஆதாரமாய் அவைகள் எங்கே?…..

எந்த ஒரு கடைகளிலும் தண்ணீரை விற்றது இல்லை., தாகத்திற்கு தண்ணீர் அளித்து விட்டு பணம் வாங்காத நிலை இன்று என்னவாயிற்று?….

காடுகளில் விலங்குகள் தண்ணீர் தேடி அலைகிறது யாரால்?….
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது யாருக்காக?……. மக்களுக்காகவா., தனியார் நிறுவனங்களுக்காகவா?…..

இவை அனைத்திற்கும் யார் காரணம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில்களையே கூறுவார்கள்.

நீருக்கு தற்போது வரை நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு நாமே முழுவதும் பொறுப்பாளிகள்.

எந்த செய்தித்தாளை எடுத்தாலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கூறியிருந்தாலும் ஏதோ ஒரு நகரில் தண்ணீர் வராததால் பொது மக்கள் சாலை மறியல், ஆட்சியரிடம் பிரச்சனை என்று ஒரு செய்தி தினமும் உள்ளது.

கால்வாய்கள், ஏரிகள்,குளங்கள்,ஆறுகள்,நதிகள் போன்றவைகளில் தண்ணீர் தற்போது கானல் நீராகவே உள்ளது.

ஒரு காலத்தில் நீர் பாய்ந்தோடிய வழியெல்லாம் தற்போது பெரிய பெரிய கட்டிடங்கலே நமக்கு காட்சியளிக்கிறது.

ஏதோ ஒரு தனியார் நிறுவனம் வளர்ச்சி பெறவும், அதன் இலாபத்திற்காகவும் தண்ணீரை அதிக அளவில் எடுக்க அனுமதியளித்து குளிர்பானம் தயாரிக்க அனுமதி., இதர பொருட்கள் தயாரிக்கும் வேறு சில நிறுவங்கள்., மக்கள் வாழ்ந்தால் என்ன தண்ணீர் இல்லாமல் இறந்தால் என்ன…..

மேற்கூறிய பல பிரச்சனைகளுக்கு யாராலும் தீர்வு சொல்வது கடினம் – இல்லை அதை நாம் நினைத்தால் மாற்ற இயலும்., இதற்கு மேலாவது நாம் விழித்து கொள்ள வேண்டும். அவ்வாறு விழித்து கொள்ளாவிடில் நமது எதிர்கால சங்கதியினரின் வாழ்க்கை அழிவிற்கு நாமே பொறுப்பாளிகள்.

என்று தண்ணீருக்கு விலையும்., விலைக்கேற்ற அளவும் நிர்ணயிக்கப்பட்டதோ அன்றே இந்த உலகின் அழிவுக்கலாம் தொடங்கிவிட்டது…………….வரும் காலங்களில் மூன்றாம் உலகப் போர் என்பது நீருக்காகவே நடைபெறும் என்பது கண்டிப்பான உண்மை.

ஒரு சிறிய யோசனை தற்போது நாம் அனைவரும் தண்ணீரை சேமிப்பது இல்லை., நம்மால் எவ்வுளவு முடியுமோ அவ்வுளவு தண்ணீரை வீணடிக்கிறோம். ஒரு வேலை 2035 ல் நாம் வாழும் போது தண்ணீர் எவ்வாறு கிடைக்கும் அதற்காக நாம் விலை கொடுத்தாலும் கிடைக்குமா அந்த வருடத்தில் எதற்கு மதிப்பு அதிகம் என்ற சிந்தனையில் படைக்கப்பட்ட ஒரு குறும் படமே ” We are Responsible 2035 “.

நமது எதிர்கால தலைமுறையினரின் தேடலையே இக்குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மேலே கேட்கப்பட்ட அணைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடுக்கப்பட்ட குறும்படமே ” We are Responsible 2035 “