அனுமதிப்பத்திரமின்றி மூன்று துப்பாக்கிகளை வைத்திருந்தவர் கைது!

அனுமதிப்பத்திரமற்ற 03 துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் சந்தேகநபர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் படி நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ – வய்க்கால பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் இவை இருந்துள்ளதுடன், 43 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கான அனுமதிப்பத்திரம் பாதுகாப்பு அமைச்சினால் சந்தேகநபரின் தந்தைக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த அனுமதிப்பத்திரம் 2003 ஜனவரி 27ம் திகதியின் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி பெறுவதற்கு பயன்படுத்தக் கூடியது என்றும் தனது தந்தை முன்னாள் இராணுவ வீரர் என்பதால் அவர் அவற்றை பயன்படுத்தியிருந்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தந்தை கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.