இறால் பிரியாணி!

பாசுமதி அரிசி – 1 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் -1.5 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
தயிர் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 1/4 கப்
புதினா இலைகள் – 1/4 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
சூடான பால் – 4 தேக்கரண்டி

இறால்களை ஊற வைக்க…

இறால்களின் – 20
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

முதலில் 30 நிமிடம் பாசுமதி அரிசி ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும், பின் அதில் வடிகட்டிய அரிசி சேர்த்து வேக விடவும். வெந்த பின் கஞ்சியை வடித்து எடுத்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் இறால்களை எடுத்து மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும், அவற்றில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு இறால்களை சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும், பின் அதை ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். இப்போது வதக்கிய வெங்காயம் சிலவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். மீதமுள்ள வெங்காயத்தில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த பின் மிளகாய், கொத்தமல்லி தூள் சேர்க்கவும், இப்போது சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். வெட்டப்பட்ட தக்காளி சேர்த்து அதில் உப்பு, கொஞ்சம் தயிர் சேர்த்து கலக்கி நறுக்கப்பட்ட புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து, நன்கு கலந்து பச்சை வாசனை விடும் வரை அவற்றை சமைக்கவும்.

இப்போது சமைத்து வைத்து உள்ள இறால்களை சேர்த்து மசாலாவில் நன்கு டாஸ் செய்யவும். இதில் வேக வைத்த அரிசி போடவும், அதன் மேலே வறுத்த வெங்காயம், சிறிது புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து சிறிதளவு குங்குமப்பூ பால் ஊற்றி ஒரு இறுக்கமான மூடி கொண்டு மூடி 10 நிமிடம் மிக குறைந்த வெப்பதில் வைக்கவும். பின் மெதுவாக அவற்றை கிளறி பரிமாறவும்.