திமுக அரசியலில் திடீர் திருப்பம்.!

திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு அதிஉயர் பொறுப்பு வழங்கப்பட்டுவிட்டது. பொருளாளர் துரைமுருகனுடன் சேர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

கட்சிகுக்கு எதிராக உருவெடுத்த நிலையில், ஸ்டாலினின் காய் நகர்த்தலில், அழகிரி எப்போதோ வெட்டுப்பட்டு வெளியேறிவிட்டார். இப்போது கனிமொழிக்கு எதிரான வியூகம் வகுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இனி கனிமொழிதான் எல்லாமே என்று பேசிமுடித்துவிட்ட நிலையில், இந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பொதுக்குழு மேடையில் கனிமொழி பேசிய சில வார்த்தைகள் தான் இந்த நெருடலுக்கு காரணம் என்கின்றனர். அவர் சம்பந்தப்பட்டவர்கள் நன்றாகவே கவனித்துவிட்டனர். அதுதான், கனிமொழிக்கு எதிராக மாறியது என்று கூறுகின்றனர்.

பொதுக்குழுவில் தன் பேச்சைத் தொடங்கியதும், முன்னாள் பொருளாளர் போல் இல்லாமல், அதாவது ஸ்டாலின் போல இல்லாமல் என்று சொல்ல வருகிறார். புதிய பொருளாளராகிய துரைமுருகன் மகளிர் அணிக்கு நிறைய பொருள் கொடுத்து உதவவேண்டும் என்று பேசியிருக்கிறார் கனிமொழி.

இப்படி பொடி வைத்து பேசியதை ஸ்டாலின் தரப்பு ரசிக்கவில்லை. அதன் பிறகும், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் தலைவர் அல்ல.

தொண்டர்கள் ஏற்றுக்கொண்டவர்களே உண்மையில் தலைவர்கள் என்றும் கனிமொழி பேசியுள்ளார். இதை கனிமொழி சாதாரணமாகவே சொன்னாலும் ஸ்டாலின் தரப்பினர் வேறுமாதிரி அர்த்தப்படுத்திக்கொண்டனர்.

திமுக தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கின்றனர். பொதுக்குழுவில் இருக்கும் 1500 பேர் மட்டுமே திமுக இல்லை என்று அழகிரி சொன்னதை இது நினைவுபடுத்த தூண்டியுள்ளது.

மேற்கண்ட சில வார்த்தைகளை தவிர மற்றபடி ஸ்டாலினின் தலைமைப்பண்பையும் ஆளுமையையும் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகவே பேசினார் கனிமொழி. ஆனாலும், திமுகவில் ஒரு தரப்பினர் கனிமொழிக்கு எதிராக ஸ்டாலினிடம் தூபம் போட ஆரம்பித்துவிட்டதாம்.

கனிமொழியைப் பொறுத்தவரையில் 2014-க்குப் பிறகு, ஸ்டாலினுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாதானமாகத்தான் சென்று கொண்டிருக்கிறார்.

ஸ்டாலினுக்காக அழகிரியை கூட தள்ளிவைக்க கனிமொழி தயங்கவில்லை. ஆனால், திமுகவில் ஒரு தரப்பினர் மட்டும் கனிமொழியை அப்புறப்படுத்தும் எண்ணத்தை ஆரம்பத்திலிருந்தே மாற்றிக் கொள்ளவில்லை.’’

அவர்களின் ஒரே நோக்கம் பதவிக்கு யாரும் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதுதான். அதாவது, அழகிரியை ஒரு தொண்டராக வைத்திருந்தால்கூட ஆபத்து என்பதை உணர்ந்து விட்டனர்.

அதனால் தான் கட்சிக்குள் நுழையவிடாமல் செய்துகொண்டுள்ளனர். கருணாநிதி இருந்தபோதே, அவராலேயே அழகிரியை வெளியேற்றச் செய்தனர்.

இப்போது, அழகிரியைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதற்குக் காரணமாக, கருணாநிதியாலேயே நீக்கப்பட்டவர் என்பதை தான் திரும்ப திரும்ப காரணமாக சொல்கின்றனர்.

இதை மீறி அழகிரியால் முட்டிமோத முடியவில்லை. அதனால்தான், ‘ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். கட்சியைக் காப்பாற்றத்தான் தொண்டனாக இணைய ஆசைப்படுகிறேன்’ என்று அழகிரி அநியாயமாக பேட்டி கொடுக்கும் நிலைக்கு சென்றதை காண முடிகிறது.

ஆனாலும், அழகிரிக்கு மசிந்த பாடில்லை. அடுத்து, கனிமொழியைக் கட்டம் கட்டும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.’’