தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்!

இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் அமிதாப் பாச்சன். இவர் தற்போது முதல்முறையாக தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படமான உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்த படம் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.

தமிழ்வாணன் என்ற இயக்குனர் இந்த படத்தைஇயக்குகிறார். கள்வனின் காதலி படத்தை இயக்கியது இவர்தான். 12 வருடங்கள் கழித்து அவர் SJ சூர்யாவை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பற்றி அறிவித்த SJ சூர்யா, “இந்த படத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றது இயக்குனர் முருகதாஸ் உதவியால் தான்” என கூறினார்.