“இறப்பிலும் ஒன்றான கணவன் – மனைவி”,

கணவரை மருத்துவமனையில் அனுமதிக்க வந்த மனைவி திடீரென நோய்வாய்ப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணவர் உயிரிழந்த சில மணி நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கொழும்பு ராகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவரை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் காத்திருந்த நிலையில், அவரும் திடீரென நோய்வாய்ப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்த கணவர் உயிரிழந்து சில மணி நேரங்களில் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பமுனுகம – உஸ்வெடகெய்யாவ – பட்டிவெல பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.