ஆலயத்திற்கு பாதயாத்திரை… இளைஞர்கள் கோமா?

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்ட இளைஞர்கள் மீது மோட்டார் வாகனம் மோதியதில் நால்வர் காயம்.

வீரரையடி பிள்ளையார் ஆலயத்திற்கருகாமைல் நேற்று வெள்ளி இரவு 7 மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.

விபத்தில் 15ம் கிராமத்தை சேர்ந்த இருவரும் நுவரேலியாவை சேர்ந்தவர்கள் இருவருமாக மொத்தம் நான்கு பேர் படுகாயமந்தனர்.

மோட்டார் வாகனத்தை செலுத்தியவர் மது போதையில் இருந்தாக விபத்தினை அவதாதைனித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் மூவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும் ,மற்றைய இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிசார் வாகனத்தை கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.