முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சந்திரா ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
இத்தோடு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்ப உறவினர்களுக்கும் ஜனாதிபதி தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
காலமான சந்திரா ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.