சாதத்திற்கு அருமையான மலபார் முட்டை கறி

தேவையான பொருட்கள்

முட்டை – 6,
வெங்காயம் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
தக்காளி – 2,
ப. மிளகாய் – 4,
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி,
மிளகாய் தூள், மல்லி தூள் – தலா 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
கரம் மசாலா – அரை தேக்கரண்டி,
முதல் தேங்காய் பால் – ஒரு கப்,
இரண்டாவது தேங்காய் பால் – ஒரு கப்,
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
கடுகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.

சுவையான மலபார் முட்டை கறி தயார்.