திராவிட இயக்கமே உலகத் தமிழர்களுக்கானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
உடல்நல குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கலைஞர் கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் இன்று வரை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்னை மெரினாவில் அவரது உடலுக்கு மீண்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி திருநாளாக கொண்டாட வேண்டும். பாரத ரத்னா விருதுக்கு முழுமையான தகுதிக்குரியவர் கருணாநிதி. அவரின் லட்சியங்கள், உழைப்பு, பேரன்பு ஆகிய மூன்றையும் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என நாடு நம்புகிறது என்று கூறினார்.