சீனாவில் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய உணவை ஊழியர் ஒருவர் திருட்டுத் தனமாக உண்ணும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
உணவை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் பழக்கம் எல்லா நாடுகளிலும் தற்போது நடக்கிறது.
சீனாவில் சிஹி என்ற இடத்தில் (meituan) செயலி நிறுவன ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரிடம் உணவை ஒப்படைக்கச் சென்றார்.
அப்போது வாடிக்கையாளர் குடியிருப்பின் லிப்டில் ஏறிய அவர், திடீரென உணவை உண்ணத் தொடங்கி விட்டார். சூப்பையும் குடித்த அவர், பின்னர் உணவுப் பொட்டலத்தை பழைய படியே சரிசெய்து விட்டு வாடிக்கையாளரிடம் ஒப்படைத்தார்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.