தற்போது பல மனிதர்கள் மது, போதைப்பழக்கம் என அனைத்திற்கும் அடிமையாகி குடும்பத்தினை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகளை தனது குழந்தைகள் கண்ணில் படாதவாறு செய்வதும் இல்லை. அவர்கள் முன்பே அத்தவறினை அரங்கேற்றுகின்றனர்.
இங்கு பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் காட்சி காண்பவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. புகையிலைனை சிறுவனிடம் கொடுத்து அதை கையில் தட்டிவிட்டு கசக்கக் கோருகின்றனர். சிறுவனும் பெரியவர்கள் எவ்வாறு செய்வார்களோ அதே போன்று செய்து இறுதியில் வாயில் வைக்கின்றான்.