வீட்டிற்கு பணவரவை அதிகரிக்கும் பல வகையான செடிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இந்த செடி வீட்டின் அருகே இருந்தால் மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.
பூண்டு செடி அல்லது மூக்குத்திச் செடி என்று அழைக்கப்படும் . இந்த செடியின் பூக்கள் மூக்குத்தி போன்று காணப்படும்.
இந்த செடி இருக்கும் இடத்தில் விஷம் இருக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதாவது இந்த செடி இருந்த இடத்தில் வேறொரு செடியினை வைத்தால் வளரவே வளராதாம்.
இவையும் கருவேலம் செடியும் ஒன்று என்கின்றனர். கருவேலம் செடி, மூக்குத்தி செடி இவைகள் உங்களது வீட்டின் அருகே இருந்தால் அதனை கட்டாயம் அகற்றிவிட வேண்டுமாம்.
இவைகள் வீட்டில் செல்வத்தை தங்கவிடாதாம். மேலும் இந்த மூக்குத்திச் செடி ஆஸ்துமாவை ஏற்படுத்துவது மட்டுமின்றி தோல் நோய்களையும் ஏற்படுத்துகிறதாம்.