உங்கள் முகத்தைப் பளபளப்பாக்க இதை முயற்சித்துப் பாருங்கள்…

அரிசியை பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்கள் அழகு சாதணப் பொருளாக பயன்படுத்தினா்.

இதில்அரிசியை கொதிக்க வைக்கும் பொழுது கெட்டியான நீர் கிடைக்கும்.  இதை தான் கஞ்சி, என்றுக் கூறுவோம்.

பெரும்பாலும் இதை மாட்டுக்கு ஊற்றி  விட்டு வெறும் அரிசி சக்கையை நாம் சாப்பிடுகிறோம்.

தோல் மருத்துவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களின் படி  இந்த கஞ்சி நீரை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தலாம்.

ஏனென்றால் இது அதிக அளவிலான கனிமங்கள் மற்றும் விட்டமின்களைக் கொண்டுள்ளது.

இதில் விட்டமின் B நிறைந்துள்ளது.

அரிசியை கொதிக்கவைத்த நீரை வடித்து ஆரவைத்துக்கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் ஃபேசியல் செய்ததுப் போல் முகம் மின்னும்.

மேலும் இதனை தினசாரி உபயோகிப்பதின் மூலம் முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காணப்படும்.இரவு தூங்குவதற்கு  முன் 15 நிமிடங்கள் முகத்தில் போட்டுக் கொள்ளலாம்.

இப்படியும் செய்யலாம்

தயிருடன்  ஒருபிடி அரிசியை  சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் பததில் கலந்து முகத்தில் 5நிமிடங்கள் ஊரவைத்து மசாஜ் செய்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

மேலும், இதை முகத்தில் பூசுவாதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளருவதுடன் சருமத்தை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது