மத்தலவில் திடீரென இன்று அதிகாலை தரையிறங்கிய விமானங்கள்…..

மத்தல விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக இரண்டு விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.

டுபாயில் இருந்து வந்த விமானம் மற்றும் மும்பாயில் இருந்த வந்த விமானம் ஒன்றுமே இவ்வாறு மத்தலயில் தரையிறக்கப்பட்டுள்ளன.கட்டுநாயக்க விமான நிலைய பகுதிகள் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமான பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்தல விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.